வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

எதிர்ப்பை மீறி உள்ளே நுழைந்து பெண்கள் தரிசனம்! சபரிமலை சன்னிதானம் மூடல்…

January 2, 2019
in வைரல்ஸ்
எதிர்ப்பை மீறி உள்ளே நுழைந்து பெண்கள் தரிசனம்! சபரிமலை சன்னிதானம் மூடல்…
Share on FacebookShare on Twitter

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முதல்முறையாக ஐம்பது வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்ததையடுத்து, கோயில் நடை மூடப்பட்டது.

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய உத்தரவை எதிர்த்து கேரளாவில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து பல்வேறு விதங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் கேரளாவில் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து(44) என்பவரும், மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா(42) என்பவரும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயற்சித்து தோல்வி அடைந்தனர்.

இந்நிலையில், பிந்துவும், கனகதுர்காவும் இன்று(ஜனவரி 1) அதிகாலை 3.45 மணியளவில் சபரிமலை ஐயப்பனைத் தரிசனம் செய்துள்ளனர். காவல் துறையினரின் அனுமதியுடன்,பாதுகாப்புடனும் சென்றுள்ளனர். இவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து, பதினெட்டாம் படி வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக சென்றுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிந்து கூறுகையில், “நாங்கள் இரண்டாவது முறையாக சபரிமலை வந்துள்ளோம். ஆனால், இம்முறை ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டோம். அதிகாலை 1.30 மணிக்கு பம்பைக்கு வந்தோம், பின்னர் போலீசார் பாதுகாப்புடன் சபரிமலைக்கு வந்தோம். பதினெட்டாம் படிகளில் ஏறி செல்லாமல், பின்புறம் உள்ள விஜபிக்கள் செல்லும் வழியாக அதிகாலை 3.30 மணிக்கு சென்றோம். அந்தளவுக்கு எதிர்ப்பு இல்லையென்றாலும், குறைவான பக்தர்களே சரண கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாப்புடன் ஐயப்பனைத் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினோம்” என கூறினார்.

ஐயப்பனைப் பெண்கள் தரிசனம் செய்தது உறுதி என்றால் புனிதப்பூஜை நடத்தப்படும் என பந்தள மகாராஜா அறக்கட்டளை நிர்வாகி தீபா சர்மா தகவல் அளித்துள்ளார்.பெண்கள் தரிசனம் குறித்து பந்தள மகாராஜா குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறினார்.

சபரிமலை கோயிலில் பெண்கள் தரிசனம் செய்ததால், சபரிமலையில் ஆசாரங்கள் தகர்க்கப்பட்டது. இதனால் கோயில் நடை மூடப்படும் என தந்திரி அறிவித்துள்ளார். பரிகார பூஜைகள் செய்வதற்குக் கோயில் நடை அடைக்கப்பட்டது. பக்தர்கள் சன்னிதானத்திலிருந்து திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பிறகு, சந்நிதி சுத்தி பூஜைகள் நடைபெறவுள்ளன. மீண்டும் கோயில் நடை ஜனவரி 12ஆம் தேதிதான் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சபரிமலை சன்னிதானம் செல்ல விரும்பும் பெண்களுக்கு போலீஸ் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

ShareTweetSendPinShare

Related Posts

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்
வைரல்ஸ்

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?
வைரல்ஸ்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…
வைரல்ஸ்

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!
வைரல்ஸ்

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!

நித்தியானந்தாவிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி தாருங்கள் – கதறும் பெற்றோர்கள்
வைரல்ஸ்

நித்தி சிக்குவாரா? பக்தர்களே கைது என்றால் பதறாதீர்கள்..

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!
வைரல்ஸ்

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி