வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

ஓபிஎஸ்க்கும் எடப்பாடிக்கும் கருணாநிதியை இந்த அளவிற்கு பிடிக்குமா?

January 3, 2019
in அரசியல்
ஓபிஎஸ்க்கும் எடப்பாடிக்கும் கருணாநிதியை இந்த அளவிற்கு பிடிக்குமா?
Share on FacebookShare on Twitter

2019 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், வரும் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத் தொடரின் இன்று (ஜனவரி 3) முன்னாள் முதல்வர் கலைஞர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண சிங், விவசாய ஆர்வலர் நெல் ஜெயராமன், மறைந்த எம்.எல்.ஏ ஏ.கே.போஸ், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கலைஞருக்கு இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “கலைஞர் மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அயராது உழைத்த அவர், இன்று நம்மிடையே இல்லை. பல பதவிகளை வகித்தவர், அவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளிக்கும் திறன் கொண்டவர். சுதந்திர தினத்தன்று, முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தவர். இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரான கலைஞர் சமூக நீதிக்காகப் போராடியவர். மனஉறுதியாளர், எழுத்தாளர், பேச்சாளர், தமிழ் பற்றாளர், தனது அழகு தமிழால் அனைவரையும் அரவணைத்தவர். அரசியல் மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் அவரது தமிழால் ஆட்கொண்டவர் கலைஞர்” என்று புகழாரம் சூட்டினார்.

“அண்ணாவின் அன்புத் தம்பியான கலைஞரின் அழகு தமிழுக்கு மயங்காதவர் எவரும் இல்லை. தனது உடன்பிறப்புகளுக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை அவர் எழுதியுள்ளார்” என்று குறிப்பிட்ட பன்னீர்செல்வம், பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம் என்று முரசொலியில் கலைஞர் எழுதியதையும் நினைவுகூர்ந்தார். அரசியல் எல்லைகளைக் கடந்து கலைஞர் மீது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அன்பு கொண்டிருந்தனர் என்பதையும் குறிப்பிட்டார்.

கலைஞருடனான நினைவுகளை பகிர்ந்து பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், “கண்ணீரை அடக்கிக் கொண்டு கனத்த இதயத்துடன் பேசுகிறேன். என் மரணத்திற்கு கலைஞர் கண்ணீர் விடுவார் என நினைத்தேன், ஆனால் அவர் மரணத்திற்கு நான் கண்ணீர் விட வேண்டிய நிலை வந்துவிட்டது. பல குடியரசுத் தலைவர்களை உருவாக்கியவர். எனக்கு இரண்டாவது உயிரைக் கொடுத்தவர். என்னைத் தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்தவர் அவர். 2007ல் எனக்கு அறுவை சிகிச்சை நடந்தபோது, என் அறையிலேயே இருந்து கலைஞர் என்னை பார்த்துக்கொண்டார்” என்று கண்ணீர் மல்க பேசினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவின் மிகமூத்த அரசியல் தலைவர் கலைஞர். 13 வயதிலேயே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர். 17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் தலைவரான கலைஞர் பன்முகத் தன்மை கொண்டவர். அவரின் சாதனைகள் இம்மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும். பராசக்தி படத்தின் மூலம் தான் ஒரு பகுத்தறிவாளர் என்பதை இவ்வுலகிற்கு உணர்த்தியவர். 5 முறை முதல்வராக இருந்த பெருமைக்குரியவரான கலைஞர், சிறப்பான திட்டங்களை தமிழகத்திற்கு அளித்தவர். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது” என்று புகழ்ந்தார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறைக்குச் சென்ற ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள், கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவித்தனர்.

.

ShareTweetSendPinShare

Related Posts

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?
அரசியல்

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்
அரசியல்

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பெற்றுத் தந்த ராமதாசுக்கு பாராட்டு விழா! அன்புமணி வாழ்த்து அறிக்கை
அரசியல்

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பெற்றுத் தந்த ராமதாசுக்கு பாராட்டு விழா! அன்புமணி வாழ்த்து அறிக்கை

ரஜினி சொன்னதை ஏற்றுக்கொண்ட விசாரணை ஆணையம்!!
அரசியல்

ஏப்ரலில் வருகிறது அறிவிப்பு; கட்சி கொடி, கொள்கைகள் குறித்து ரஜினி ஆலோசனை

கண்ணீர் விட்டு கதறி அழுத ஸ்டாலின்…  திமுகவினரை நெகிழவிட்ட குடிசை வீட்டில் வாழ்ந்து மறந்த எம்.எல்.ஏ!!
அரசியல்

கண்ணீர் விட்டு கதறி அழுத ஸ்டாலின்… திமுகவினரை நெகிழவிட்ட குடிசை வீட்டில் வாழ்ந்து மறந்த எம்.எல்.ஏ!!

நான் தொடங்கும் கட்சியில் வந்து சேருங்க… ரஜினியை பங்கமாக கலாய்த்த பவர்ஸ்டார்
அரசியல்

நான் தொடங்கும் கட்சியில் வந்து சேருங்க… ரஜினியை பங்கமாக கலாய்த்த பவர்ஸ்டார்

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி