வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

சபரிமலை சன்னிதானத்திற்கு பெண்களை அழைத்துச் சென்றது எப்படி?…… அம்பலமானது போலீசாரின் மாஸ்டர் பிளான்

January 3, 2019
in வைரல்ஸ்
சபரிமலை சன்னிதானத்திற்கு பெண்களை அழைத்துச் சென்றது எப்படி?…… அம்பலமானது போலீசாரின் மாஸ்டர் பிளான்
Share on FacebookShare on Twitter

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. உச்சநீதிமன்ற உத்தரவு வெளியான கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதிக்கு பிறகு கேரள அரசு எடுத்த எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. சபரிமலை கர்ம சமிதி, ஐயப்ப பக்தர்களின் கடும் எதிர்ப்பை மீறி எந்த பெண்களையும் போலீசாரால் சன்னிதானம் அழைத்து செல்ல முடியவில்லை. இதனை பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் பெண்கள் நல ஆர்வலர்கள் பலரும் விமர்சித்தனர். இது ஆளும் கம்யூனிஸ்டு அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு என்று கூறப்பட்டது. இதையடுத்து மகரவிளக்கு சீசன் காலத்தில் எப்படியாவது பெண்களை சபரிமலை சன்னிதானத்துக்கு அழைத்து செல்ல அரசு முடிவு செய்தது. இதற்கு பொருத்தமான நபர்களை கண்டறியும் பணியில் கேரள போலீசார் ஈடுபட்டனர்.

அவர்களின் பார்வையில் பட்டவர்கள் மலப்புரம் கொயிலாண்டியை சேர்ந்த பிந்து (வயது 40), கோழிக்கோட்டை சேர்ந்த கனகதுர்கா (44) என்ற 2 பெண்கள். இவர்களில் பிந்து கல்லூரி ஆசிரியை, மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தீவிர ஆதரவாளர். அவரது தோழி கனகதுர்காவும் இதே சிந்தனை கொண்டவர். கூட்டுறவு ஊழியர். பிந்து, கனகதுர்கா இருவரையும் சபரிமலைக்கு அழைத்து செல்ல போலீசார் முடிவு செய்தனர். கடந்த மாதம் 24-ந் தேதி இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்றனர். சன்னிதானம் அருகே போராட்டக்காரர்கள் தடுப்பு சுவர் போல திரண்டு இரண்டு பெண்களையும் வழிமறித்தனர். இதனால் சன்னிதானம் செல்லமுடியாமல் பிந்துவும், கனகதுர்காவும் பாதியிலேயே வீடு திரும்பினர்.

சன்னிதானம் செல்ல முடியாமல் திரும்பிய பிந்து, கனகதுர்கா இருவரும் அதன்பின்பு வீடு திரும்பவில்லை. திடீரென அவர்கள் மாயமாகி விட்டனர். உறவினர்கள் அவர்களை தேடிய போது கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். உறவினர்கள் அங்கு சென்ற போது ஆஸ்பத்திரியில் அவர்கள் இல்லை. எனவே அவர்கள் இருவரும் போராட்டக்காரர்களுக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இந்து அமைப்புகளும் இதை நம்பினர். போராட்டக்காரர்களின் நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த கேரள போலீசார் திட்டமிட்டனர். அதன்படி பிந்து, கனகதுர்கா இருவரையும் மீண்டும் சபரிமலை அழைத்து செல்ல போலீசார் ரகசிய திட்டம் வகுத்தனர்.

சன்னிதானம் செல்ல போலீசார் முடிவு செய்த நாள் ஜனவரி 2. இந்த நாளில் சபரிமலையில் கூட்டம் அதிகம் இருக்காது என்று போலீசார் கருதினர். இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஜனவரி 1-ந்தேதி கேரள அரசு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மகளிர் மனித சுவர் போராட்டம் நடத்தியது. இதில் யார்- யார் பங்கேற்கிறார்கள் என்பதை பார்க்க போராட்டக்காரர்கள் அவரவர் ஊருக்கு செல்வார்கள் என போலீசார் எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடி போராட்டக்காரர்கள் பலரும் ஊர் திரும்பினர். இச்சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட போலீசார் கோட்டயம் எஸ்.பி. ஹரிசங்கர், உளவுத்துறை டி.ஐ.ஜி. சுரேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் பிந்து, கனகதுர்கா இருவரையும் சபரிமலை அழைத்து செல்ல திட்டமிட்டனர்.

இத்திட்டத்தை நிறைவேற்ற தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சாதாரண உடையில் பம்பை வந்தனர். நேற்று அதிகாலை வந்து சேர்ந்த போலீஸ் படை பிந்து, கனகதுர்கா இருவருக்கும் சாதாரண உடையில் பாதுகாப்பு அளித்தனர். சாதாரண போலீசாரின் பாதுகாப்புடன் பிந்து, கனகதுர்கா இருவரும் சபரிமலைக்கு பொருள்கள் கொண்டு செல்லும் டிராக்டர் பாதையில் அழைத்து செல்லப்பட்டனர். அதிகாலை 1.30 மணிக்கு இவர்களின் பயணம் தொடங்கியது. 3 மணிக்கு பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானம் சென்றடைந்தனர். அப்போது கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் பாடப்பட்டது. இந்த நேரத்தில் 18 -ம் படியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் ஊழியர்கள் கோவிலின் பின்பகுதியில் உள்ள வாயில் வழியாக செல்லத்தொடங்கினர். அவர்களுடன் பிந்துவும், கனகதுர்காவும் இணைந்து கொண்டனர். அப்போது அவர்களை அடையாளம் கண்டுகொண்ட சில ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அங்கு நின்ற உயர் அதிகாரிகள் அவர்களை விரட்டினர்.

எதிர்ப்பு அகன்றதும் பிந்து, கனகதுர்கா இருவரும் மிக எளிதாக சன்னிதானம் சென்றடைந்தனர். அங்கு சாமி தரிசனமும் செய்தனர். இதனை அர்ச்சகர்கள், தந்திரிகள் யாரும் கவனிக்கவில்லை. பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானத்தில் தரிசனம் முடிந்து பம்பை திரும்பிய பின், பத்திரிகையாளர்களை சந்தித்து தரிசனம் செய்ததை கூறிய பிறகே இந்த விபரம் பக்தர்களுக்கு தெரியவந்தது. இச்சம்பவத்திற்கு முழுக்க, முழுக்க போலீஸ் உயர் அதிகாரிகளே காரணம் என்றும் இதற்காக அவர்கள் கடந்த ஒரு வாரமாக திட்டமிட்டு காய் நகர்த்திய விபரத்தையும் அறிந்து கொண்ட பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர். தற்போது அவர்களின் போராட்டத்தை முறியடிக்கும் முயற்சிகளில் போலீசார் இறங்கி உள்ளனர். அதே நேரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பெண்கள் இருவரை சன்னிதானம் வரை அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்துவிட்டோம் என்று அரசு மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது.

Share11TweetSendPinShare

Related Posts

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்
வைரல்ஸ்

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?
வைரல்ஸ்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…
வைரல்ஸ்

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!
வைரல்ஸ்

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!

நித்தியானந்தாவிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி தாருங்கள் – கதறும் பெற்றோர்கள்
வைரல்ஸ்

நித்தி சிக்குவாரா? பக்தர்களே கைது என்றால் பதறாதீர்கள்..

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!
வைரல்ஸ்

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி