அட்டக்கத்தி படத்தில் காலூன்றிய பா.ரஞ்சித், மெட்ராஸ் திரைப்படத்தின் மூலமாக, மக்களை மட்டுமல்ல, திரையுலகத்தினரையும் தன் பக்கம் திரும்ப வைத்தார். முன்னணி இயக்குனர்களே ரஜினிகாந்திடம் கரை சொல்ல க்யூவில் நின்று இருக்க, சவுந்தர்யா ரஜினிகாந்த் நட்பின் மூலமாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து கபாலி திரைப்படத்தை இயக்கினார் பா.ரஞ்சித், இந்த 3 படங்களில் தலித் அரசியலை முன்னெடுத்த பா.ரஞ்சித், அடுத்ததாக, நடிகர் தனுஷ் தயாரிப்பில் ரஜினி காந்தை வைத்து, காலா படத்தை இயக்கினார்.
இந்த படத்திலும், தலித் அரசியலே பிரதிபலித்தது. திரைப்படங்களில் மட்டுமில்லாமல், பொது மேடைகளிலும் தலித் அரசியலை அவர் முன் வைத்தார். இந்நிலையில், தலித் அரசியல் மட்டுமே தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கும் பா.ரஞ்சித்திடம், சரக்கு குறைந்து விட்டதாகவும், இன்னும் 2 வருடங்கள் போனால் படம் இயக்க மாட்டார் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், புதிய இயக்குனர்களை வைத்து, அவர் திரைப்படங்களை இயக்கலாம் என கூறப்படுகிறது.
Discussion about this post