வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

நான்கரை மணி நேர திடுக் பயணம்!! 136 விமான பயணிகளின் உயிர் தப்பினர்… விமானம் தப்பியது எப்படி? பரபரப்புத் தகவல்கள்

October 13, 2018
in வைரல்ஸ்
நான்கரை மணி நேர திடுக் பயணம்!!  136 விமான பயணிகளின் உயிர் தப்பினர்… விமானம் தப்பியது எப்படி? பரபரப்புத் தகவல்கள்
Share on FacebookShare on Twitter

திருச்சியிலிருந்து பயணிகளுடன் துபாய் பறந்த போயிங் ரக விமானம் ஒன்று விபத்திலிருந்து தப்பிய பரபரப்பு சம்பவம் நேற்று நடைபெற்றது. 136 பயணிகளும் உயிர்தப்பிய பரபரப்பான தருணங்களைக் காண்போம்….

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சியில் இருந்து துபாய்க்கு தினமும் விமானங்களை இயக்கி வருகிறது.  இந்த நிறுவனத்தின் போயிங் ரக விமானம் ஒன்று நேற்று அதிகாலை 1.15 மணிக்கு துபாய்க்கு புறப்பட தயாரானது.

துபாய் செல்வதற்காக அதில் 130 பயணிகள் அமர்ந்தனர்.  விமானிகள் உட்பட 6 ஊழியர்களும் இருந்தனர். விமானிகள் கணேஷ் பாபு, அனுராக் ஆகியோர் விமானத்தை இயக்கினார்கள்.

ஓடுபாதையின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி நோக்கி வேகமாக சென்ற விமானம் தரையில் இருந்து மேலே எழும்பும் போது, வழக்கத்திற்கு மாறாக தாழ்வாக பறந்த விமானத்தின் பின்பக்க சக்கரங்கள் ஓடுபாதையின் கடைசி பகுதியில் இருந்த ஐ.எல்.எஸ். எனப்படும் ஆண்டெனா கருவிகள் மீது மோதி, அதன் அருகில் உள்ள விமான நிலையத்தின் சுற்றுச்சுவரின் மேல் பகுதியை உடைத்துக்கொண்டு பறந்தது.

விமானத்தின் சக்கரங்கள் இடித்ததால், சுமார் 10 அடி உயரம் உள்ள அந்த சுற்றுச்சுவரின் மேல் பகுதியில் 2 இடங்களில் தலா 5 அடி அகலத்திற்கு சுவர் இடிந்து விழுந்தது. 5 ஆண்டானா கருவிகளும், ஒரு கண்காணிப்பு கருவியும் வளைந்து சேதம் அடைந்தன. ஆனாலும் விமானம் எந்த வித பிரச்சினையும் இன்றி வானில் பறந்தது.

இந்த விபத்தை கண்காணிப்பு கோபுரத்தில் நின்று கொண்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பார்த்து உயர் அதிகாரிகளுக்கும், விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் உள்பட அதிகாரிகள் குழுவினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். உடனடியாக கட்டுப்பாட்டு அறை மூலம் அந்த விமானிக்கு விபத்து நடந்திருப்பது பற்றி தகவல் கொடுக்க முயன்றனர். ஆனால் அதற்குள் விமானம் திருச்சி வான் எல்லையை தாண்டி சென்று விட்டது.

சுற்றுச்சுவரை இடித்து தள்ளி விட்டு பறந்து சென்ற விமானம் எந்த வித சேதமும் இன்றி துபாய் வரை பறக்க முடியுமா? அதில் உள்ள ஊழியர்கள் உள்பட 136 பயணிகளும் துபாய் வரை பாதுகாப்பாக போய்ச் சேர முடியுமா? என்ற சந்தேகமும் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. விமானம் சுற்றுச்சுவர் மீது மோதிய போது விமானத்தில் இருந்த பயணிகளுக்கு பெரிய அளவில் சத்தம் கேட்டுள்ளது. ஆனால் என்ன நடந்தது? எதனால் இந்த சத்தம்? என்று தெரியாமல் பயணிகள் உயிர்ப் பயம் மேலோங்க ஆபத்தான பயணத்தை தொடர்ந்தனர்.

இதற்கிடையே பிரச்சினைக்குரிய அந்த விமானம் மஸ்கட் நகர் எல்லைக்குள் சென்று விட்டது. அப்போது விமான நிலைய ஆணைய குழும அதிகாரிகள் விமானத்தை மும்பை விமான நிலையத்தில் தரை இறக்குமாறு விமானிக்கு கட்டளை பிறப்பித்தனர்.

இந்த கட்டளையை ஏற்று விமானிகள் விமானத்தை மும்பைக்கு திருப்பி ஓட்டி வந்து அங்குள்ள விமான நிலையத்தில் அதிகாலை 5.30 மணிக்கு தரை இறக்கினார். விமானம் பாதுகாப்பாக தரை இறங்கிய பின்னரே அதில் இருந்த 136 பயணிகளும், ஊழியர்களும் தாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதை எண்ணி ஆனந்த கண்ணீர் விட்டனர்.

மும்பையில் விமானம் தரை இறங்கிவிட்டது என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே திருச்சி விமான நிலைய அதிகாரிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பின்னர் அந்த பயணிகள் வேறொரு விமானம் மூலம் மும்பையில் இருந்து துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சியில் சுற்றுசுவர், ஆண்டனா மீது மோதியதில் விமானத்தின் அடிபாகம் உடைந்து சேதம் அடைந்து இருந்தது. சுற்றுசுவரில் இருந்த கம்பி வலை விமானத்தின் சக்கரத்தில் சிக்கி இருந்தது. விமானம் மும்பையில் தரை இறங்கி பிறகு அதிகாரிகள் விமானத்தில் சோதனை நடத்திய பிறகு தான் இந்த சேத விவரம் தெரியவந்தது.

இந்த சேதங்களை ஆய்வு செய்த மும்பை அதிகாரிகள் விமானம் பெரிய விபத்தில் இருந்து தப்பி உள்ளது என்று திருச்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

ஓடுபாதையில் இருந்து மேலே எழும்பி உயர பறக்கும் நேரத்தில் விமானம் சுற்றுச்சுவரை சேதப்படுத்தி விபத்து ஏற்படுத்தியதற்கு விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமா? அல்லது விமானியின் கவனக்குறைவினால் இந்த விபத்து நடந்ததா? என விசாரண நடத்தி  வருகின்றனர்.

விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது டுவிட்டர் பதிவில், திருச்சி விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்துக்கு விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியதாகவும், விமான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய துணைக்குழு ஒன்றை ஏர் இந்தியா அமைத்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

ShareTweetSendPinShare

Related Posts

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்
வைரல்ஸ்

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?
வைரல்ஸ்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…
வைரல்ஸ்

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!
வைரல்ஸ்

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!

நித்தியானந்தாவிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி தாருங்கள் – கதறும் பெற்றோர்கள்
வைரல்ஸ்

நித்தி சிக்குவாரா? பக்தர்களே கைது என்றால் பதறாதீர்கள்..

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!
வைரல்ஸ்

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி