ஆண்டாளைப் பழித்த கவிஞருக்கு, மற்றொரு பெண் வடிவத்தின் மூலம் ஆண்டாள் பாடம் புகட்டுகிறார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். வைரமுத்து மீது சின்மயி எழுப்பிய புகார் குறித்து தமிழிசை கூறியதாவது ‘ 100 ஆண்டுகளாகப் பழகி வரும் பழக்கம் மதிக்கப்படவேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 படி மத நம்பிக்கைகள் மதிக்கப்படவேண்டும் அது இந்து மதத்திற்கும் பொருந்தும். வாக்கு வங்கிக்காகச் சிறுபான்மையினர் தாஜா செய்யப்படுவதும் பெரும்பான்மையினர் உதாசீனப்படுத்துவதும் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியினர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூட தெரிவிப்பது இல்லை.
அவ்வளவு தீண்டத்தகாத மதமாகிவிட்டதா இந்து மதம்’ என்று கேள்வி எழுப்பினார். ‘மத உணர்வும் பண்பாடும் எதிர்க்கப்பட்டால் பொங்கி எழுவோம் என்பதை இந்தக் கூட்டம் நிரூபித்துள்ளது என்று கூறிய அவர், ஆண்டாளை விமர்சித்த கவிஞருக்கு மற்றொரு பெண் வடிவத்தில் ஆண்டாள் முகத்திரையைக் கிழித்துக்கொண்டிருக்கிறாள் என்றும் வைரமுத்துவைச் சாடியுள்ளார்.
Discussion about this post