வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

அவரு பெரிய மனுஷனா? அதை நாங்கள் தான் சொல்லனும்… ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கேள்வி

October 15, 2018
in வைரல்ஸ்
அவரு பெரிய மனுஷனா? அதை நாங்கள் தான் சொல்லனும்… ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கேள்வி
Share on FacebookShare on Twitter

வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த சின்மயிக்கு ஆதரவாகப் பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சித்தார்த், நடிகை ஸ்ரீரெட்டி உள்ளிட்ட திரையுலகினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இது சமூக வலைதளங்களில் கடுமையான விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.

இந்தநிலையில் “என் மீது வழக்குப் போடலாம், சந்திக்கக் காத்திருக்கிறேன். நான் நல்லவனா, கெட்டவனா என்பதை நீதிமன்றம் சொல்லட்டும்”, என்று பாடகி சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில் அளித்துள்ளார்.

இது குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கருத்து தெரிவித்துள்ளார். அதில் “மீ டூ’ இயக்கம் என்பது வரவேற்கத்தக்க ஒன்று. பெண்கள் மீதான செக்ஸ் ரீதியான துன்புறுத்தல் என்பது பிறப்பிலிருந்து இறப்பு வரை தொடர்கிறது. வெளிச்சத்துக்கு வர வேண்டிய வி‌ஷயம் இது. அப்போதுதான் சட்ட ரீதியிலான நடவடிக்கையோ நீதியோ கிடைக்கும். பிரபலங்கள் மட்டுமல்லாது பிரபலங்கள் அல்லாதவர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் வெளியில் வந்து சொல்ல வேண்டும்.

வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. அவர் ஏதாவது கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருக்கிறாரா? ஏதேனும் பொறுப்பில் இருக்கிறாரா? இல்லையே. பணத்துக்காகப் பாடல் எழுதுபவர்தானே? பிறகு ஏன் அவரை விசாரிக்கக் கூடாது?

வைரமுத்து தன் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்குக் காலம் தான் பதில் சொல்லும் என்கிறார். காலமா சின்மயிக்குப் பாலியல் துன்புறுத்தல் தந்தது? இப்படி ஒரு பதிலைச் சொல்லிவிட்டு ஒதுங்கலாமா? சம்பந்தப்பட்டவர்கள்தானே பதில் சொல்ல வேண்டும்?

வைரமுத்து ஒரு பெரிய மனிதர் என்று சொல்லிக்கொள்கிறார். அதை நாங்கள் தான் சொல்ல வேண்டும். பிரபலமானவர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் கிடையாது. அழகாகப் பேசினாலே அதற்கு மயங்கக் கூடியவர்கள் தமிழர்கள். அதுபோன்ற போக்குதான் இது.

சின்மயி வி‌ஷயத்தில் அரசியல் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. சின்மயி ஏன் காவல் துறைக்குச் செல்லத் தாமதிக்கிறார் என்றும் தெரியவில்லை. சின்மயி வி‌ஷயத்தில் யாராவது ஒரு நீதிபதி தானே முன்வந்து கையில் எடுத்து விசாரிக்க வேண்டும். இது இன்னும் வழக்காக மாறாமல் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

சின்மயி தாமதமாகப் புகார் சொல்வதைக் குறை சொல்ல முடியாது. சம்பவம் நடந்தபோது அவருக்கு 17, 18 வயதுதான். அந்தச் சூழலில் அவர் குழப்ப நிலைக்குத்தான் சென்றிருப்பார். இப்போது அவருக்கு வயது காரணமாக பக்குவம் வந்திருக்கலாம்.

இன்று பெண்கள் துணிச்சலாகப் பல வி‌ஷயங்களில் சாதித்துவருகிறார்கள். ஆனால் பழமைவாதத்தைக் கையில் பிடித்துள்ளார்கள். பழமையைச் சில வி‌ஷயங்களில்தான் கடைபிடிக்க வேண்டும். பெண்ணுக்குத் தீங்கு நடக்கும்போது அவள் அதை சத்தமாக வெளியில் கொண்டுவரவேண்டும். இதில் வெட்கப்பட வேண்டியவர் அந்த குற்றத்தை செய்தவர்தானே தவிர பாதிக்கப்படும் பெண்கள் அல்ல என்பது புரிய வேண்டும். சமூக வலைதளங்களில் இதை பகிர்வதால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அரசாங்கமும் இதற்கு இன்னும் உதவ வேண்டும். குடும்ப கட்டுப்பாடு, மழை நீர் சேகரிப்பு போன்று இந்த பிரச்சினையிலும் பிரசார இயக்கங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது இதுபோன்ற புகார்களை எடுத்து சென்று இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருப்பார்” என்றார்.

ShareTweetSendPinShare

Related Posts

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்
வைரல்ஸ்

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?
வைரல்ஸ்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…
வைரல்ஸ்

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!
வைரல்ஸ்

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!

நித்தியானந்தாவிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி தாருங்கள் – கதறும் பெற்றோர்கள்
வைரல்ஸ்

நித்தி சிக்குவாரா? பக்தர்களே கைது என்றால் பதறாதீர்கள்..

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!
வைரல்ஸ்

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி