மனைவியானவள் கனவன் தனக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் பழக்கம் எல்லா கனவன் மனைவியிடமும் உண்டு. எதிப்பார்ப்பு என்பது யாரிடம் யார் வேண்டுமானாலும் எதிர் பார்க்கலாம். ஆனால் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து திருமணம் என்னும் பந்தத்தில் இணைந்து ஒருவர் ஒருவரை புரிந்து கொண்டு வாழும் ஒரு அற்புதமான உறவு தான் கனவன் மனைவி உறவு. இந்த உறவில் உள்ள எதிர்ப்பார்ப்புக்கள் வித்தியாசமானது.
அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். மனது புண்படும்படி பேசக் கூடாது. கோபப்படக்கூடாது. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது. பலர் முன் திட்டக்கூடாது. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும். பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும். மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும். பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். ஒளிவு மறைவு கூடாது. மனைவியை நம்ப வேண்டும். முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும். தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும். உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும். சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும். குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். சாப்பாடு வேண்டுமென்றால் முன்கூட்டியே சொல்ல வேண்டும். எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும். சொன்ன நேரத்திற்கு வர வேண்டும். எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும். மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும். மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க
வேண்டும். பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்
இவ்வளவு எதிர்ப்பார்ப்புகள் கொண்ட மனைவியை புரிந்து கொண்ட கனவன் இருந்தால் அதை விட பெரிய பரிசு அவளுடைய வாழ்க்கையில் இல்லை. ஆனால் பலபேர் இன்றும் கோர்ட் வாசலில் தானே நிற்கின்றனர். ஒருவர் ஒருவரை புரிந்து கொண்டு வாழுங்கள்.
Discussion about this post