ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எண்ணற்ற சலுகைகளை வழங்கி அதன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அதேபோல் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அதற்கான சிறப்பு சலுகையை ஜியோ அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சார்பாக, “இந்த தீபாவளிக்கு சலுகை பெற்று அடுத்த தீபாவளி வரை நன்மைகளை அடையுங்கள்” என்ற வகையில் இந்த வாய்ப்பை ஜியோ வழங்கியுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ் ரூ.1699க்கு ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற உள்ளூர்/ வெளியூர் அழைப்புகளை ஒரு வருடத்திற்கு இலவசமாக பெறலாம். மேலும் இந்த திட்டத்தின் மூலம் 100% கேஸ்-பேக் பெறலாம். இதில் மூன்று ரூ.500 கேஸ்-பேக் கூப்பன் மற்றும் ரூ 200-க்கான ஒரு கேஸ்-பேக் கூப்பன் கிடைக்கும். அதாவது ரூ.1699 ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்களுககு ரூ.1700 கேஸ்-பேக்காக கிடைக்கும். இந்த கேஸ்-பேக் வவுச்சரை இந்த வருடம் டிசம்பர் 2018 வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் இதில் தினமும் 100 மெசேஜ் இலவசமாக அனுப்பலாம். ஒரு வருடத்திற்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா என மொத்தம் 547 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த சலுகை அக்டோபர் 18 முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும். இது தவிர ரிலையன்ஸ் ஜியோவின் மற்ற திட்டங்களும் 100% கேஸ்-பேக் வழங்கப்படுகிறது. அதில் ரூ.149, ரூ.198, ரூ.299, ரூ.349, ரூ.398, ரூ.399, ரூ.448, ரூ.449, ரூ.449, ரூ.799, ரூ.999, ரூ.1,999, ரூ.4,999 மற்றும் ரூ.9,999 திட்டங்களுக்கும் அடங்கும்.
Discussion about this post