சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் `கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள வாயாடி பெத்த புள்ள பாடலை 5 கோடிக்கும் அதிகமானோர் இணையத்தில் கண்டுகளித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. திபு நிணன் தாமஸ் இசையில் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா, வைக்கோம் விஜயலட்சுமி இணைந்து பாடிய `வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பாடலை இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் யூடியூப்பில் கண்டுகளித்துள்ளனர்.
இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறியிருப்பதாவது: தந்தை, மகள் உறவையும், அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களையும் சொல்லும் இந்த பாடல் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மற்றும் பாடலாசிரியர் ஜி.கே.பி ஆகியோரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அதோடு, என் மகள் ஆராதனாவுடன் எனக்கு இருக்கும் உறவை காலம் முழுக்க நினைக்க, கிடைத்த இந்த பாடலுக்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பாடல் தற்போது யூடியூபில் 5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இது பலருக்கு பிடித்தமான பாடலாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆராதனாவின் அழகிய குரல் இந்த பாடலின் இனிமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னையும், என் மகள் ஆராதனாவையும் இந்த ஒரே பாடலில் பாடவைக்கும் யோசனையை கொண்டு வந்த அருண்ராஜாவுக்கு நன்றி என்று அவர் கூறினார்.
Discussion about this post