கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்தார். இந்த படத்தின் சூட்டிங் டார்ஜிலிங் உள்ளிட்ட வடமாநிலங்களில் நடைப்பெற்றது. மேலும், சென்னையில் சில காட்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்தது என்றும் 15 நாட்களுக்கு முன்பே சூட்டிங்கை முடித்தற்காக இயக்குநர் சுப்புராஜ் மற்றும் படக்குழுவுக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post