கட்சி துவங்குவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டதாகவும் ஆனால் டிசம்பர் மாதம் தனது பிறந்த நாளன்று கட்சி துவங்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலைத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம், டிசம்பர் 12 ஆம் தேதி கட்சி குறித்து அறிவிக்கப்படுமா? என கேட்கப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், கட்சி துவங்குவதற்கான 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டதாக கூறினார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பின், நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
சபரிமலையில் பெண்களை அனுமதித்து உச்சநீதிமன்ற கொடுத்த தீர்ப்பை வரவேற்கும், அதே நேரத்தில் ஐதீகத்தையும் பின்பற்ற வேண்டும் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார். மீ டு விவகாரத்தை தவறானக் குற்றச்சாட்டுக்களுக்கு பயன்படுத்தக்கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டார். வைரமுத்து தன் மீது உள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளதையும் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டினார்.
Discussion about this post