வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

இந்த காரணங்கள் நம்பறமாதிரியா இருக்கு? விசாரணை நடத்தியே ஆகணும்… எஸ்.ஆர்.எம் யூனிவர்சிட்டியை குறிவைக்கும் ராமதாஸ்

February 25, 2020
in தமிழகம்
இந்த காரணங்கள் நம்பறமாதிரியா இருக்கு? விசாரணை நடத்தியே ஆகணும்…  எஸ்.ஆர்.எம் யூனிவர்சிட்டியை குறிவைக்கும் ராமதாஸ்
Share on FacebookShare on Twitter

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுஷி ராணா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் எஸ்.ஆர். எம். பல்கலை மாணவர்களின் தொடர் தற்கொலைகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் கடந்த ஓராண்டில் 6ஆவது மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், ஐயங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுஷி ராணா பி.டெக் உயிரி தொழில்நுட்பம் பயின்று வந்தார். சனிக் கிழமை பிற்பகலில் விடுதி அறைக்குள் சென்ற மாணவி ஆயுஷி அன்று இரவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கு நம்பக் கூடிய வகையில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. விடுதி அறையில் தங்கியிருந்த ஆயுஷி ராணா, விடுதிக்கு வெளியில் சென்று தங்கியிருந்ததால், அவரை அவரது பெற்றோர் திட்டியதாகவும், அதனால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மற்றொருபுறம் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக பெற்றோர் திட்டியதால் தூக்கில் தொங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும், உண்மையான காரணம் என்ன? என்பது இப்போது வரை உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொள்வது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனிஸ் சவுத்ரி, சென்னையை அடுத்த பொன்னேரியைச் சேர்ந்த மாணவி அனுப்பிரியா, கன்னியாகுமரியைச் சேர்ந்த மாணவர் ராகவ் ஆகியோர் உட்பட 5 பேர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஐவரின் தற்கொலைக்குமே தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக பெற்றோர் திட்டியது தான் காரணம் என்று கூறி வழக்குகள் முடிக்கப்பட்டன. இவை நம்பும்படியாக இல்லை என்பதே உண்மை.

மாணவி ஆயுஷி ராணா சனிக்கிழமை பிற்பகல் அறைக்குள் சென்ற நிலையில், இரவு 9.00 மணிக்கு பிறகும் அவர் வெளியில் வரவில்லை என்பதையோ, இடைப்பட்ட சுமார் 8 மணி நேரத்தில் அவரது அறையில் தங்கியிருந்த சக மாணவிகள் எவரும் அறைக்குள் செல்லவில்லை என்பதையோ, சன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடியுமா? என்பதையோ சந்தேகக் கண் கொண்டு பார்க்காமல் கடந்து சென்று விட முடியாது. ஆனால், உள்ளூர் காவல்துறையினர் பல்கலைக்கழக நிர்வாகம் கூறுவது தான் வேதம் என்று கருதி, அனைத்து நிகழ்வுகளையும் தற்கொலை வழக்காகவே பதிவு செய்வதுடன் தங்கள் பணியை முடித்துக் கொள்வது மிகவும் வியப்பாக உள்ளது. உள்ளூர் காவல்துறையினரின் விசாரணையில் நம்பிக்கை இல்லாமல், எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழக தற்கொலை சாவுகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு கடந்த ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி ஆணையிட்டார். சிபிசிஐடி கண்காணிப்பாளர் மல்லிகா தலைமையிலான படையினர் பல நாட்கள் பல்கலைக்கழகத்தில் முகாமிட்டு விசாரித்த போதிலும், அதில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து வெளிப்படையாக எந்த தகவலும் இல்லை. விசாரணை கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது.

எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடந்தவை அனைத்தும் தற்கொலையாகவே இருந்தாலும் கூட, அதற்காக சொல்லப்படும் ரெடிமேடு காரணங்கள் நம்பும்படியாக இல்லை. இதுகுறித்த செய்திகள் பெரும்பான்மையான ஊடகங்களில் வெளியாகாதவாறு மறைக்கப்படுவது ஐயத்தை அதிகரிக்கிறது. எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் நிலையில், அது தொடர்பாக அம்மாணவர்களின் குடும்பத்தினரிடம் நிலவி வரும் அச்சத்தையும், ஐயங்களையும் வெளிப்படையான விசாரணை மூலம் போக்க வேண்டியது தமிழக காவல்துறையின் கடமை ஆகும்.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தற்கொலைகளை மட்டும் தனித்த நிகழ்வுகளாக பார்க்க முடியாது. அங்கு நடைபெறும் பிற சட்டவிரோத செயல்களுக்கும், தற்கொலைகளுக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் பலர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு சென்றும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு வசதியாக எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தற்கொலை சாவுகள் மற்றும் அங்கு நிகழ்ந்த பிற சட்டவிரோத செயல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ShareTweetSendPinShare

Related Posts

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!
தமிழகம்

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

பெண்ணை கழுத்தறுத்து கொலை..! கள்ளக்காதலனா..?  இல்லை கணவனா..?
தமிழகம்

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

4 வயது வயது சிறுமியை அடித்து கொன்ற வாலிபர்…! ஏன் எதற்க்காக தெரியுமா கண்கலங்க வைத்த கொடுமை…?
தமிழகம்

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!
தமிழகம்

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!
தமிழகம்

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!
தமிழகம்

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி