வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

முதல்வருக்கு மார்ச் 7ம் தேதி பாராட்டு விழா… காவிரி விவசாயிகள் நலச் சங்க பொதுச்செயலாளர்!

February 26, 2020
in தமிழகம்
முதல்வருக்கு மார்ச் 7ம் தேதி பாராட்டு விழா… காவிரி விவசாயிகள் நலச் சங்க பொதுச்செயலாளர்!
Share on FacebookShare on Twitter

காவிரி விவசாயிகள் நலச் சங்க பொதுச்செயலாளர் மன்னார்குடி ரங்கநாதன் திருச்சி சுற்றுலா மாளிகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்தார்.

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு அவர் நன்றி தெரிவித்தார். இதன் பின்னர் மன்னார்குடி ரங்கநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 2013ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்தினோம். அதைவிட மகிழ்ச்சி தற்போது அதிகமாக கிடைத்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் டெல்டா மாவட்டங்கள் அழிந்து விடும் என்ற அச்சம் இருந்தது.

ஆனால் சேலத்தில் அறிவித்த 10 நாட்களில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மசோதாவை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த செயல் வீரர் என்பதை வெளிக்காட்டி உள்ளார்.

பொதுவாக ஒரு மசோதா நிறைவேற மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும். ஆனால் வேகமாக செயல்பட்டு உடனடியாக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி அரசிதழில் வெளியிடச் செய்து உள்ளார்.

இதன்மூலம் சோழநாடு சோறுடைத்து என்ற வார்த்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். டெல்டா மாவட்டங்களுக்கு நிரந்தர ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக வரும் மார்ச் 7ஆம் தேதி திருவாரூரில் அம்மா அரங்கத்தில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அரியலூர் உள்ளிட்ட சில பகுதிகள் விடுபட்டு இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆனால் அவ்வாறு இல்லை. மசோதா வெளிவந்த பின்னர் இதன் விபரம் தெரியவரும். அப்போது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம் தீரும்.

அந்த மசோதாவில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரியை நிரந்தர அமைப்பாக்ககூடிய அளவுக்கு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஹைட்ரோ கார்பன் மீத்தேன் போன்றவற்றால் பூமிக்கடியில் இருக்கும் வாயுவை வெளியில் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதுபோல் ஆந்திராவில் ஆறு முதல் ஏழு அடி வரை கடல் நீர் உள்ளே புகுந்து உள்ளது.

இதனால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஒரு மீட்டர் மட்டுமே மணல் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் 10 முதல் 20 மீட்டர் ஆழம் வரை குழி தோண்டி மண் அள்ளுகின்றனர். மணல் அள்ளுவதை அரசே மேற்கொள்ள வேண்டும்.

தனியாருக்கு விடக்கூடாது. இது தொடர்பாக திருவாரூரில் நடக்கும் பாராட்டு விழாவின்போது முதலமைச்சரி வலியுறுத்துவோம் என்றார்.

இந்த சந்திப்பின் போது சங்கத் தலைவர் ராஜாராம், காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சத்யநாராயணன், நிர்வாகிகள் வரதராஜன், புலியூர் நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ShareTweetSendPinShare

Related Posts

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!
தமிழகம்

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

பெண்ணை கழுத்தறுத்து கொலை..! கள்ளக்காதலனா..?  இல்லை கணவனா..?
தமிழகம்

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

4 வயது வயது சிறுமியை அடித்து கொன்ற வாலிபர்…! ஏன் எதற்க்காக தெரியுமா கண்கலங்க வைத்த கொடுமை…?
தமிழகம்

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!
தமிழகம்

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!
தமிழகம்

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!
தமிழகம்

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி