என்னாது திரௌபதி படத்திற்கு வெறும் 29 மார்க் தானா? முன்னணி வார இதழ் மீது கொந்தளிக்கும் பாமக அருள் ரத்தினம் விமர்சனம் எழுதிய வார இதழ் மீது கொந்தளித்துள்ளார்.
திரௌபதி படம், ரஜினி நடித்த கபாலி, காலா படங்களைக் காட்டிலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆண்டின் மிக அதிக லாபம் ஈட்டிய படமாக திரௌபதி உள்ளது. ஒரே சாதிக்கு ஜால்ரா அடிக்கும் படங்கள் மட்டுமே குப்பையாக கொட்டப்படும் தமிழ்நாட்டில், அதற்கு மாற்றான உண்மையை பேசும் ஒரே படமான திரௌபதி வெற்றி பெற்றுள்ளது.
ஒரு படத்திற்கு மக்கள் அளிக்கும் வரவேற்புதான் அதன் உண்மை மதிப்பெண். அந்த வகையில், திரௌபதி படத்திற்கு மக்கள் அளிக்கும் மதிப்பெண் 92. அதையே தலைக்கீழாக 29 என மாற்றி தனது சாதிவெறியை தணித்துக் கொண்டுள்ளது விகடன் கும்பல்.
திரௌபதி படத்தின் மாபெரும் வெற்றியை சகித்துக்கொள்ள முடியாமல் விகடன், தி இந்து தமிழ், BBC Tamil ஆகிய ஊடங்கள் கொந்தளித்து எழுந்துள்ளன. Artistic freedom (கலையாற்றலை வெளிப்படுத்தும் உரிமை) என்பது ஒரு சாதியினருக்கு மட்டும் தான். மற்ற சமுதாயங்களுக்கு அந்த உரிமை இல்லை என்று இவர்கள் சொல்கிறார்கள். இவர்களின் விமர்சனத்தை கொண்டே, இந்த ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளோர் யார் என்பதை கண்டுகொள்ள முடியும்!
போலி சாதி ஒழிப்பு போராளிகளின் ‘எதிர்க்கலக’ கருத்துதான் இத்தனை காலமாக தமிழ்நாட்டில் மாபெரும் ஒரே புரட்சியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இளம்பெண்களையும் சிறுமிகளையும் எப்படியாவது ஏமாற்றி காதலித்து, உடனுக்குடன் ‘மேட்டரை முடிக்க வேண்டும்’ என்று போதிக்கும் பா. ரஞ்சித் வகையறா படங்கள் தான் இங்கு மீண்டும் மீண்டும் திணிக்கப்படுகின்றன. இவ்வாறு சிறுமிகளையும் பெண்களையும் குறிவைக்கும் பலப்பல படங்களுக்கு மத்தியில் ‘மண்ணையும் பெண்ணையும் காப்போம்’ என்கிற ஒற்றை திரைப்படம் இவர்களை அலறி துடிக்க வைக்கிறது.
ஒரே ஒரு தரப்பின் வன்மமான கருத்துக்களை மட்டுமே மக்கள் மத்தியில் வலுக்கட்டாயமாக திணிப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. பன்முக சமூகங்கள் வசிக்கும் சூழலில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கலை வடிவங்களாக உருவாக வேண்டும். அத்தகைய ஆரோக்கியமான சூழல் தமிழ் நாட்டில் இல்லை. இங்கு கலாச்சார பன்முகத்தன்மைக்கு (Cultural diversity) இடமே இல்லை. மாற்று தரப்பினரின் கலை வடிவங்கள் வலுக்கட்டாயமாக ஒடுக்கப்படுகின்றன. குறிப்பாக, வன்னியர்கள் சினிமாவுக்குள்ளும் ஊடகங்களுக்கும் நுழைந்துவிடாமல் மிகவும் நுணுக்கமாக தடுக்கப்பட்டுள்ளனர்.இந்த அக்கிரமமான சூழலை தகர்ப்பதற்கான முதல் படியாக திரௌபதி வெற்றி பெற்றுள்ளது. இனி இதுபோல பலநூறு படங்கள் தமிழ்நாட்டில் வெளிவரும். சாதிவெறியர்களின் எதிர்க்கலக சதி முறியடிக்கப்படும்.
மற்றபடி, விகடனுக்கு இருக்கும் அதீத சாதிவெறிக்கு, அந்த பத்திரிகை திரௌபதிக்கு 10 மதிப்பெண்ணிற்கு கீழாகத் தான் அளித்திருக்க வேண்டும். மாறாக, 29 மதிப்பெண் கொடுத்திருப்பதே விகடனின் வன்மத்தாலும் மறுக்க முடியாத வெற்றி தான்.
# குறிப்பு 1: விகடன் பத்திரிகை குழுமம் 80% ஒரே சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. சாதிவெறி பிடித்த இந்த புதிய பிராமணர் கூட்டம், திரௌபதி மீது வன்மத்தை கொட்டுவதில் வியப்பதற்கு எதுவும் இல்லை.
# குறிப்பு 2: ARTISTIC FREEDOM is the freedom to imagine, create and distribute diverse cultural expressions free of political interference or the pressures of non-state actors. It includes the right of all citizens to have access to these works and is essential for the wellbeing of societies.
# குறிப்பு 3: CULTURAL DIVERSITY can be protected and promoted only if human rights and fundamental freedoms, such as freedom of expression, information and communication, as well as the ability of individuals to have access to diverse cultural expressions, are guaranteed. (UNESCO)
# குறிப்பு 4: எதிர்க்கலகம்: ஒரு சமுதாயத்தை பிரதிநிதத்துவப் படுத்துவதாக கூறிக்கொள்ளும், ஆனால், அந்த சமுதாயத்தின் நலனில் சிறிதளவும் அக்கறையில்லாத – தம்மிடம் மட்டுமே “சரக்கும், மிடுக்கும்” இருப்பதாகக் கூறிக்கொள்ளும் – ஒரு வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் “எதிர்க்கலகம்” என்கிற சித்தாந்தத்தை உருவாக்கியுள்ளனர்.
தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்கள் மீது, படுகொலை நோக்கிலும், பண்பாட்டு ரீதியாக, பொருளாதார ரீதியாக, மனோவியல் ரீதியாகவும் திட்டமிட்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்பது இந்த வன்முறை கும்பலின் ‘எதிர்க்கலக’ முன்னெடுப்பு ஆகும்.
‘ஒருகாலத்தில் உங்களது முன்னோர்களால் நாங்கள் ஒடுக்கப்பட்டிருந்தோம். எனவே, அதற்கு பதிலடியாக இப்போது நாங்கள் உங்களை தாக்குகிறோம். இதுதான் நீதி, இதுதான் நியாயம். எங்களது தாக்குதலை நீங்கள் மனமுவந்து ஏற்க வேண்டும். உங்களது உடைமைகள், உரிமைகள், பெண்கள் என எல்லாவற்றையும் எங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்’ – என்பது இவர்கள் வைக்கும் வரலாற்று ரீதியான எதிர்க்கலக நியாயம் ஆகும்.
Discussion about this post