வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வடசென்னை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது . அடி தடி காட்சிகள், பீப் வசனங்கள் என பல விஷயங்களால் மக்கள் மத்தியில் சர்ச்சைக்கு உள்ளான போதிலும், ஒரு நல்ல திரைப்படமாகவே மக்கள் மனதில் பதிந்திருக்கிறது வட சென்னை திரைப்படம்.
இந்த படத்தில் வசென்னை மக்களின் வாழ்க்கையை வெற்றி மாறன் காட்டி இருக்கும் விதம் வடசென்னை மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மிகவும் லோக்கலாக காட்டி இருப்பது , கெட்ட வார்த்தை வசனங்கள் அதிகம் இடம் பெறச்செய்திருப்பது போன்றவை தங்களை இழிவு படுத்துவதாக இந்த படத்தை பார்த்து பொங்கி இருக்கின்றனர் வடசென்னை மக்கள்.
. #VadaChennai Director #VetriMaaran Says Dat D Film Was Made Only 2 Show D Lives Of People Living Der & 4 Entertainment Purpose ONLY!!! He Also Apologizes If Any Scene Had Hurt D Sentiment Of Others & He Will Cut The Boat/Harbour Scene Which Was Disliked By A Few@VetriMaaran pic.twitter.com/sveFfKDUR4
— RIAZ K AHMED (@RIAZtheboss) October 22, 2018
மேலும் இந்த படத்தில் மீனவ மக்களை சித்தரித்திருக்கும் விதம் சரி இல்லை என்றும் வெற்றி மாறனுக்கு எதிராக குரல் எழுப்பி இருந்தனர் மக்கள். இதற்கெல்லாம் பதிலளித்த வெற்றி மாறன் , சில சர்ச்சைக்குரிய காட்சிகளை இந்த படத்தில் இருந்து நீக்கப்போவதாக உறுதி அளித்திருக்கிறார். மேலும் இந்த படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்போவதை உறுதி செய்த வெற்றி மாறன், அதில் மக்கள் உரிமை போராட்டம் தான் கதை என்பதையும் தெரிவித்திருக்கிறார்.
Discussion about this post