அரசியல், திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பாலியல் தொந்தரவுகளை, மீ டூ இயக்கத்தின் வெளி வந்தன வண்ணம் உள்ளன. இந்நிலையில், பாலியல் தொல்லை குறித்து கருத்து தெரிவித்த நடிகை மும்தாஜ், நாம் திரைத்துறையில் எப்படி நடந்துகொள்கிறோமோ அப்படித்தான் விளைவுகளும் இருக்கும் என்றார். திரைத்துறையில் தனியா வாங்க உங்கிட்ட பேசணும் என்று சொன்னால், நாம் தான் யோசிக்க வேண்டும் என்றும் மிகப்பெரிய கூட்டுமுயற்சியால் உருவாகிற சினிமாவில் தனியே ஏன் பேசவேண்டும் என சிந்திக்க வேண்டும் எனவும் கூறினார்.
தனியே வரச்சொல்லி என்னிடமும் சொல்லியிருக்கிறார்கள் என்றும் நான் அப்படிப் பார்ப்பதையே தவிர்த்திருக்கிறேன் எனவும் மும்தாஜ் தெரிவித்தார். மேலும், சில தருணங்களில் சில விழாக்களுக்கோ, படப்பிடிப்புக்கோ நான் மட்டுமே போகக்கூடிய சூழல் வரும்போது, என்னுடைய அம்மா, மிளகாய்ப் பொடியை ஒரு பேப்பரில் மடித்து, என்னிடம் தருவார் என்று கூறிய மும்தாஜ், யாராவது தப்பா ஏதாவது நடந்துச்சுன்னா, உடனே மிளகாய்ப் பொடியைத் தூவிடுன்னு கொடுத்திருக்காங்க என்றார்.
Discussion about this post