வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்ல பெண்கள் விரும்பாவிட்டால் ஆண்கள் அழைக்க மாட்டார்கள் என நடிகை ஆண்ட்டிரியா தெரிவித்துள்ளார்.
வடசென்னை படத்தில்ஆண்ட்ரியா துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். துணிச்சலான கருத்துக்களை பேசும் ஆண்ட்ரியா மீடு இயக்கம குறித்து துணிச்சலாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் : மீடு இயக்கத்தை வரவேற்கிறேன். தற்போது மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ளன. இந்த மீடு இயக்கம் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வாய்ப்பு இல்லை. பட வாய்ப்புக்காக என்னை யாரும் படுக்கைக்கு அழைத்தது இல்லை. பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது ஆண்களின் தவறு மட்டுமல்ல. வேலைக்காக படுக்கைக்கு செல்ல பெண்கள் விருப்பமாக இல்லாவிட்டால் ஆண்கள் அழைக்க மாட்டார்க்ள. எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது. நான் யாருடனும் படுக்கைக்கு செல்ல மாட்டேன் என்று பெண்கள் தைரியமாக சொன்னால்தான் இந்த பழக்கம் முடிவுக்கு வரும். நான் பெரிய, பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றுகிறேன்.
நல்ல நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம உள்ள கதைகளில் நடிக்கிறேன். படுக்கைக்கு செல்லாமல்தான் இத்தனை படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். கடின உழைப்பு, திறமை மீது நம்பிக்கை வைத்திருப்பவள் நான்” என்று கூறியிருக்கிறார்.
Discussion about this post