பாலியல் தொல்லைகள் தொடர்பாக, இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயி, லீனா மணிமேகலை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சினி, நடிகை ஸ்ருதி ஹரிஹரன், அமலாபால், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் மீ டூ இயக்கம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், பாலியல் தொல்லைகள் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேசுவது வரவேற்கத்தக்கது என்றும் இந்த விவகாரம் குறித்து பலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டு நிரூபிக்கபட்டால் சம்பந்தப்பட்டவர்களின் உண்மை முகம் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post