ஜப்பான் கட்டுப்பாடில் இருந்த குட்டி தீவை தற்போது காணவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானின் வடக்கு கடலோர பகுதியில் ஹோகிடோ என்ற தீவு உள்ளது. இந்த தீவு அருகே உள்ள இசாமி ஹனகிட்டோ ஹோஜுமா என்ற ஒரு குட்டி தீவுதான் காணாமல் போய்விட்டதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளதாவது: ”கடந்த 1987 ஆம் ஆண்டில் இந்த குட்டி தீவு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது.
கடல் மட்டத்தை விட நான்கரை அடி உயரத்தில் இருந்தது. தற்போது அதை காணவில்லை” என தெரிவித்துள்ளது. இதனிடையே ஜப்பானில் ஏற்பட நிலநடுக்கத்தின் காரணமாக இந்த குட்டி தீவு கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். நகைச்சுவைக்காக கிணற்றை காணவில்லை என்று கூறியிருப்பார் வடிவேலு. ஆனால், இங்கோ உண்மையிலேயே இருந்த தீவு காணவில்லை என்று ஜப்பான் புகார் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post