தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 7 முதல் 9ஆம் தேதி வரை திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் 5 காட்சிகளும், இதர நாட்களில் 4 காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதி வழங்குமாறு, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஏற்கெனவே 5 காட்சிகள் வெளியிட அனுமதி அளிக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாட்களில், நாள்தோறும் 4 காட்சிகள் மட்டுமே அனுமதி இருக்கும் நிலையில், நவம்பர் 7, 8, 9 ஆகிய நாட்களிலும், நவம்பர் 12ஆம் தேதியும் கூடுதலாக ஒரு காட்சியை திரையிடலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தீபாவளிக்கு மறுநாளில் இருந்து 3 நாட்களுக்கு நாளொன்றுக்கு 5 காட்சிகள் திரையிடப்படும். அதேபோல், நவம்பர் 12ஆம் தேதியும் 5 காட்சிகள் திரையரங்குகளில் திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post