நடிகர் விஷால், ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா 2004ல் இயக்கிய செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சண்டக்கோழி 2 அவரது 25வது படம். தற்போது அயோக்யா படத்தில் நடித்து வரும் விஷால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இயக்குனர் ஆகிறார். முதல்முறையாக அவர் இயக்கும் படத்தின் கதை, தெரு நாய்கள் குறித்து எழுதப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஹீரோயினாக திரிஷா நடிக்கிறார். ஏற்கனவே விஷால், திரிஷா இருவரும் பிராணிகளுக்கு ஆதரவாக பேசி, விலங்குகளை சுட்டுக் கொல்வதை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன், அர்ஜூன் இயக்கிய சில படங்களில் விஷால் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அந்த அனுபவத்தை அடிப்படையாக வைத்து தன் முதல் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Discussion about this post