வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

மாணவி கற்பழித்து கொலை… ஒருவர் கைது!

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவரை கைது செய்துள்ளனர் போலீசார்.

November 12, 2018
in வைரல்ஸ்
மாணவி கற்பழித்து கொலை…  ஒருவர் கைது!
Share on FacebookShare on Twitter

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அண்ணாமலை – மலர் தம்பதியர். இவர்களது மகள் சவுமியா, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் தீபாவளி விடுமுறைக்காக, இவர் தனது வீட்டுக்கு வந்தார்.

கடந்த 5ஆம் தேதியன்று, அண்ணாமலையும் மலரும் கூலி வேலைக்குச் சென்றுவிட்டனர். மதிய வேளையில், மலம் கழிப்பதற்காக வீட்டின் அருகேயுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றார் சவுமியா. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் என்ற இரண்டு இளைஞர்கள் அவரைத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். அவரைக் கடுமையாகத் துன்புறுத்தினர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்தவுடன், இருவரும் தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாணவி சவுமியா தர்மபுரி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் (நவம்பர் 10) அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட சதீஷ், ரமேஷ் இருவரையும் தேடும் பணியை முடுக்கினர் போலீசார். நேற்று (நவம்பர் 11) சதீஷ் என்பவர் பிடிபட்டார். இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரமேஷைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில், தனது புகாரை வாங்க முதலில் போலீசார் மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளார் சவுமியாவின் தந்தை அண்ணாமலை. அதன்பிறகு, அவர் 1077 என்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு நடந்த துயரத்தைத் தெரிவித்ததாகவும், அதற்கடுத்த நாளே காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து மாலை மலர் செய்தி வெளியிட்டுள்ளது.

“கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் பேசிய பிறகு, எங்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். எனது மகளிடம் புகார் மனுவை எழுதி வாங்கிக்கொண்டனர். போலீசார் சொன்னதை அவர் எழுதிக் கொடுத்தார். பின்னர் டிஎஸ்பியைச் சந்தித்தோம். அவர், சவுமியா கற்பழிக்கப்பட்ட விவகாரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறினார். பின்னர் போலீசார் வேனிலேயே தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்து, சவுமியாவை சிகிச்சைக்குச் சேர்த்தனர்.

அப்போது, டாக்டரிடமும் பலாத்காரம் சம்பவத்தைக் கூற வேண்டாம் என்று போலீசார் தடுத்துவிட்டனர். இதனால் வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகக் கூறி, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் எனது மகளை காப்பகத்தில் சேர்த்துவிட்டனர். தொடர்ந்து அவருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் கொண்டுவந்து சேர்த்தோம். அங்கு, சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். என் மகள் சாவு விவகாரத்தில், எனக்கு நீதி கிடைக்கவில்லை. எனது மகளைச் சீரழித்தவர்களை போலீசார் தப்பவிட்டு விட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரமேஷின் தாயார் சிட்லிங் கிராமத்தில் மது விற்பனை செய்து வருவதாகவும், இதனால் அவர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

ShareTweetSendPinShare

Related Posts

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்
வைரல்ஸ்

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?
வைரல்ஸ்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…
வைரல்ஸ்

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!
வைரல்ஸ்

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!

நித்தியானந்தாவிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி தாருங்கள் – கதறும் பெற்றோர்கள்
வைரல்ஸ்

நித்தி சிக்குவாரா? பக்தர்களே கைது என்றால் பதறாதீர்கள்..

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!
வைரல்ஸ்

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி