சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்துக்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் புதிய திரைப்படம் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயனை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக இணையதளங்களில் தகவல்கள் பரவின. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ‘சீமராஜா’ படத்தை தொடர்ந்து இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கி வரும் புதுப்படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
இதையடுத்து இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங்குடன் ஜோடி சேருகிறார். அதன் பிறகு ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்திற்கும் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். இந்நிலையில், இந்த 3 படங்களை தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாகவும், அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகவுள்ள இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Discussion about this post