வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

5 கி.மீ. வேகத்தில் கஜா புயல்!

மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த கஜா புயல், காலை 2.30 மணி நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ. என்ற வேகத்தில் நகர்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

November 14, 2018
in வைரல்ஸ்
5 கி.மீ. வேகத்தில் கஜா புயல்!
Share on FacebookShare on Twitter

வங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கூறப்பட்டது. இதையடுத்து, புயல் மூன்று முறை திசை மாறியது. தற்போது, நவம்பர் 15ஆம் தேதி பாம்பன் – கடலூர் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை நிலவரப்படி கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 760 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு கிழக்கே – வடக்கே 850 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. கஜா புயல் வலுப்பெற்று இன்று மாலை தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், புயலின் வேகம் குறைந்தால், அது கரையை கடக்க தாமதமாகும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறுவதால் கடலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யலாம். சில பகுதிகளில் 20 செ.மீ. வரை மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தயார்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதய்குமார் இன்று (நவம்பர் 13) சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், கடந்த கால அனுபவங்களைக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளோம். கஜா புயல் தற்போதுவரை 3 முறை திசை மாறியுள்ளது. அதனால், புயல் நகர்வைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். புயல் பற்றிய தவறான செய்திகளை வெளியிட வேண்டாம். தாழ்வான பகுதிகளிலுள்ள மக்களை வெளியேற்றத் தேவையான படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முதல்நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். பாதிக்கப்படும் எனக் கண்டறியப்பட்ட இடங்களுக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புயல் எச்சரிக்கை குறித்துக் கடலோர மக்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 236 மருத்துவக் குழுக்களும் மரம் அறுக்கும் இயந்திரங்களும்,ஜேசிபி இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை அரக்கோணத்திலிருந்து 25 தேசியப் பேரிடர் குழுவினர் கடலூர் வந்தனர். அதுபோன்று, பேரிடர் குழுவினர் புதுவை,நாகைப்பட்டினம், காரைக்கால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 8 குழுக்களாகச் சென்றுள்ளனர்.

ரெட் அலர்ட் வாபஸ்

கஜா புயல் மேற்கு மற்றும் வடமேற்கில் நகருவதால் ஆந்திராவில் ரெட் அலர்ட் திரும்பப் பெறபட்டது. கேரள மாநிலத்துக்கு நவம்பர் 16ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை, ரெட் கலர் கோட்தான் விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ShareTweetSendPinShare

Related Posts

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்
வைரல்ஸ்

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?
வைரல்ஸ்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…
வைரல்ஸ்

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!
வைரல்ஸ்

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!

நித்தியானந்தாவிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி தாருங்கள் – கதறும் பெற்றோர்கள்
வைரல்ஸ்

நித்தி சிக்குவாரா? பக்தர்களே கைது என்றால் பதறாதீர்கள்..

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!
வைரல்ஸ்

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி