கஜா புயலால் நாகை மாவட்டம் முழுவதும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக நாகை ரயில் நிலையம் பெரும் சேதம் அடைந்துள்ளது. அதிக இடங்களில் மரங்கள் முறிந்து கிடக்கின்றன. மின்சாரம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டும், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் நாகையில் வீசிய புயல் காற்று காரணமாக ரயில் நிலைய மேற்கூறை சேதமடைந்துள்ளது.
கஜா புயல் இன்று நள்ளிரவு நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்தது. கரையை கடக்கும் போது 110 கி.மீ. வரை வீசிய பலத்த சூறைக்காற்றில் சிக்கி நாகை மாவட்டம் சின்னாபின்னமானது. பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின் கம்பங்கள் விழுந்ததால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
Discussion about this post