திருமணத்திற்குப் பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் ஜோதிகா நடித்து வருகிறார். தற்போது காற்றின் மொழி படம் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்க அவர் 1.25 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
தற்போது அடுத்து அவர் அறிமுக இயக்குனர் S.ராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அந்த படத்திற்காக அவருக்கு 1.5 கோடி சம்பளம்கொடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்கள் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக ஜோதிகா சம்பளம் வாங்குவது மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
Discussion about this post