பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரிவிக்கப்படும் ‘Me Too’ புகார்கள் உள்நோக்கம் கொண்டது என்று மலையாள நடிகர் மோகன்லால் கூறியுள்ள கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. கேரள திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் யாருக்கும் கிடையாது, மீ டூ-வை இயக்கமாக யாரும் நினைக்கூடாது என தெரிவித்த மோகன்லால், அது மிகவும் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.
பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் தெரிவிப்பது ஃபேஷனாகி விட்டது. பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்கள் சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து பணியிடங்களிலும் உள்ளன என்று மோகன்லால் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக மலையாள திரைப்பட நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக இருந்ததாக, மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவராக இருந்த மோகன்லால் மீது விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post