இதனைத் தொடா்ந்து முதல்வா் பழனிசாமி இன்று புதுக்கோட்டை தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று முதல்வா் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகா் ரஜினிகாந்த்தும் தனது மக்கள் மன்றம் வாயிலாக ரூ.50 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்களை வழங்க உள்ளார்.
மேலும் ட்விட்டா் பதிவில், நம் அன்புத்தலைவர் திரு. ரஜினிகாந்த் தன்னுடைய சார்பில் ரூபாய். 50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் மூலமாக நேரடியாக வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தலைவரின் விருப்பப்படி நாளை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். நிவாரணப் பொருட்களை மன்றக் காவலர்கள் மூலமாக பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஒப்படைத்த நம் அன்புத் தலைவருக்கு நன்றி” என்று பதிவிடப்பட்டுள்ளது.
Discussion about this post