திருமண வாழ்க்கையில் ஈடுபட்ட நடிகை நமீதா சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது அகம்பாவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அகம்பாவம் கதையை இயக்குநர்கள் ஸ்ரீமகேஷ், வாராகி ஆகியோர் கூறினர். இது சமூக விஷயங்களை உள்ளடக்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையாக இருந்தது. எனவே நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.
கடந்த 2016ல் மோகன்லால் உடன் நடித்த ‘புலி முருகன்’ படம் தான் கடைசியாக வெளியான திரைப்படம் என்றும் கூறியுள்ளார். மேலும் முன்பு போல் கவர்ச்சி வேடங்களில் நடிக்க விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் வெளிவருகின்றன. அதேபோல் நானும் நடிக்க விரும்புகிறேன். தற்போது எனது கவனம் சினிமாவில் மட்டும் தான். எதிர்காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து முடிவெடுப்பேன் என்றார்.
பாலியல் புகார்களை மீ டூ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதற்கும் தைரியம் வேண்டும். இந்த விவகாரத்தில் உண்மை எது, பொய் எது என்று பாராமல் புகார் அளிக்கும் பெண்களை கவனியுங்கள் என்றும்,அதேசமயம் மீ டூ விவகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
Discussion about this post