ஜம்மு-காஷ்மீர் சட்டசபையை ஆளுநர் அதிரடியாக கலைத்துள்ளார். சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சட்டசபையை கலைப்பதாக ஆளுநர் சத்யபால் மாலிக் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக இணைந்து ஆட்சி அமைத்தது. முஃப்தி முகமது சையது முதலமைச்சராகவும், நிர்மல் குமார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.
Former J&K CM and President of PDP Mehbooba Mufti writes to J&K Governor Satya Pal Malik to stake the claim for forming govt in the state. The letter reads, "You might have gathered from media reports that Congress and NC have decided to extend support to our party to form govt." pic.twitter.com/F7coNfKO44
— ANI (@ANI) November 21, 2018
முஃப்தி முகமது உடல் நலக் குறைவால் உயிரிழந்ததை அடுத்து அவரது மகள் மெஹபூபா முஃப்தி முதலமைச்சராக 2016, ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றார். இதனையடுத்து, பிடிபி, பாஜக இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. கடந்த ஜீனில் மெகபூபா முப்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பாஜக- மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி அரசு கவிழ்ந்ததை அடுத்து சட்டசபை முடக்கப்பட்டது. 5 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த சட்டமன்றத்தை மத்திய அரசு கலைத்துள்ளது.
Jammu and Kashmir Governor Satya Pal Malik has passed an order dissolving the state Legislative Assembly. pic.twitter.com/TirFfZfTCs
— ANI (@ANI) November 21, 2018
காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க மெகபூபா முப்தி இன்று உரிமை கோரியிருந்தார். தேசியவதாக காங்கிரஸ் தன்னை ஆதரிப்பதை சுட்டிக்காட்டி ஆளுநருக்கு மெகபூபா முப்தி கடிதம் எழுதி இருந்தார். மெகபூபா முப்தி ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில் சட்டசபை திடீர் கலைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 19 ஆம் தேதியுடன் ஆளுநரின் 6 மாத கால ஆட்சி முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post