10 ஆண்டுகளில் 100 படங்கள் நடித்த நடிகை என்ற பெருமையையும் பெற்றவர் ரோஜா. 1999 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த ரோஜா, கடந்த 2014 ஆம் ஆண்டு நகரி தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் மாநில மகளிரணி தலைவியாக இருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடின ரோஜா, இதையொட்டி நகரி தொகுதியில் உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்திற்கு ஒய்.எஸ் அண்ணா உணவகம் என்று பெயர் வைத்திருக்கிறார், அந்த உணவகத்தில் ஒரு சாப்பாடு ரூ.4 -க்கு வழங்கப்படுகிறதாம்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ரோஜாவின் இத்தகைய நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ரோஜாவை போல பிற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-களையும் அவரவர் தொகுதியில் இத்தகைய உணவகத்தை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post