
கஜா புயலால் வீடுகளை இழந்த விவசாயிகளுக்கு 50 வீடுகள் கட்டிக்கொடுக்க முடிவு செய்துள்ளதாக் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நமது விவசாயிகளுக்கு ஐம்பது வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் உங்கள் எல்லோருடைய ஆசிர்வாதம் தேவை. எனவும் குறிப்பிட்டுள்ளார். கஜா புயலால் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்ததாகவும் ஒரு தனியார் தொலை காட்சியில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்து நிர்கதியாய் ஒரு குடும்பம் பற்றி பார்த்தேன் எனவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் பாதிக்கப்பட்ட 50 வீடுகளை கட்டித்தர உள்ளேன் என்றும் அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எங்களிடம் தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித்தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன் எனவும் லாரன்ஸ் கூறியுள்ளார். மேலும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள் என்றும் நான் அவர்கள் மூலம் இறைவனைக்காண முயற்சிக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு தனியார் தொலைக்காட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள் என்றும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Discussion about this post