மீடூ பற்றி அனைவரும் அறிந்திருப்பீர். அப்படிப்பட்ட மி டூ இயக்கம். ஹாலிவுட்டில் தொடங்கி, தற்போது கோலிவுட் வரை பரவியுள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தைரியமாக சொல்வதற்காக தொடங்கப்பட்டது தான் இந்த இயக்கம்.
தமிழ் திரையுலகில் மி டூவில் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகார் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதுவும் கவிப்பேரரசு தன்னை ஹோட்டல் ரூமுக்கு வைரமுத்து வரச்சொன்னதாக குற்றம்சாட்டி இருந்தார் சின்மயி.
இதுமட்டுமில்லாமல் சமீபத்தில் டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார். மாதம் தோறும் செலுத்தவேண்டிய சந்தா கூட சரியாக செலுத்தவில்லை என பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர் டப்பிங் யூனியனை சேர்ந்தவர்கள். இதற்கு சின்மயி தொடர்ந்து விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார்.
தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் நிதி திரட்ட ஒரு பாடல் கச்சேரி நடத்தவுள்ளதாகவும், அந்த நிகழ்ச்சி இன்று 7 . 30 மணிக்கு ராமாடா ப்ளாசாவில் ‘ வில் நடைபெற உள்ளது என்பதை சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Discussion about this post